| | Al-Wâqi‘ah | |
| | كاتب الموضوع | رسالة |
---|
أحمد محمد لبن Ahmad.M.Lbn مؤسس ومدير المنتدى
عدد المساهمات : 49023 العمر : 72
| موضوع: Al-Wâqi‘ah السبت 01 يوليو 2017, 6:41 pm | |
| Al-Wâqi‘ah அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். [56:1] மாபெரும் நிகழ்ச்சி(யான இறுதிநாள்) ஏற்பட்டால் [56:2] அந்நிகழ்ச்சியைப் பொய்யாக்குவது எதுவுமில்லை. [56:3] அது (தீயோரைத்) தாழ்த்தி விடும், (நல்லோரை) உயர்த்தி விடும். [56:4] பூமி நடுக்கத்தால் நடுக்கமடையச் செய்யும் போது. [56:5] இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது, [56:6] பின்னர், அது பரப்பப்பட்ட புழுதி ஆகிவிடும். [56:7] (அப்போது) நீங்களும் மூன்று பிரிவினர்களாகி விடுவீர்கள். [56:8] (முதலாமவர்) வலது பாரிசத்திலுள்ளோர் - வலது பாரிசத்துக்காரர் யார்? (என்பதை அறிவீர்களா?) [56:9] (இரண்டாமவர்) இடது பாரிசத்திலுள்ளோர் - இடது பாரிசத்திலுள்ளோர் யார்? (என அறிவீர்களா?) [56:10] (மூன்றாமவர் நம்பிக்கையில்) முந்தியவர்கள் (மறுமையிலும்) முந்தியவர்களே யாவார்கள். [56:11] இவர்கள் (இறைவனுக்கு) அண்மையிலாக்கப்பட்டவர்கள். [56:12] இவர்கள் பாக்கியங்களுள்ள (சுவனச்) சோலைகளில் இருப்பர். [56:13] முதலாமவரில் ஒரு பெருங் கூட்டத்தினரும், [56:14] பின்னவர்களில், ஒரு சொற்பத்தொகையினரும் - [56:15] (பொன்னிழைகளால்) ஆக்கப் பெற்ற கட்டில்களின் மீது - [56:16] ஒருவரையொருவர் முன்னோக்கியவாகளாக, அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள். [56:17] நிலையான இளமையுடைய இளைஞர்கள் (இவர்கள் பணிக்காகச்) சுற்றிக் கொண்டே இருப்பார்கள். [56:18] தெளிந்த பானங்களால் நிறம்பிய கிண்ணங்களையும், கெண்டிகளையும், குவளைகளையும் கொண்டு (அவர்களிடம் சுற்றி வருவார்கள்). [56:19] (அப்பானங்களைப் பருகும்) அவர்கள் அவற்றினால் தலை நோய்க்காளாக மாட்டார்கள், மதிமயங்கவுமாட்டார்கள். [56:20] இன்னும் அவர்கள் தெரிந்தெடுக்கும் கனி வகைகளையும் - [56:21] விரும்பும் பட்சிகளின் மாமிசத்தையும் (கொண்டு அவ்விளைஞர்கள் வருவார்கள்). [56:22] (அங்கு இவர்களுக்கு) ஹூருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர். [56:23] மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அவர்கள் (இருப்பார்கள்). [56:24] (இவையாவும்) சுவர்க்க வாசிகள் (இம்மையில் செய்து கொண்டிருந்த) செயல்களுக்கு கூலியாகும். [56:25] அங்கு இவர்கள் வீணானதையும், பாவமுண்டாக்குவதையும் (கொண்ட பேச்சுகளைச்) செவியுற மாட்டார்கள். [56:26] 'ஸலாம், ஸலாம்' என்னும் சொல்லையே (செவியுறுவார்கள்). [56:27] இன்னும் வலப்புறத்தார்கள் - வலப்புறத்தார்கள் யார்? (என்பதை அறிவீர்களா?) [56:28] (அவர்கள்) முள்ளில்லாத இலந்தை மரத்தின் கீழும்: [56:29] (நுனி முதல் அடிவரை) குலை குலையாகப் பழங்களுடை வாழை மரத்தின் கீழும்: [56:30] இன்னும், நீண்ட நிழலிலும், [56:31] (சதா) ஒலித்தோடிக் கொண்டிருக்கும் நீரின் அருகிலும், [56:32] ஏராளமான கனிவகைகளின் மத்தியிலும் - [56:33] அவை அற்றுப் போகாதவை, (உண்ணத்) தடுக்கப்படாதவை - [56:34] மேலும், உன்னதமான விரிப்புகளில் (அமர்ந்திருப்பர்). [56:35] நிச்சயமாக (ஹூருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி, [56:36] அப்பெண்களைக் கன்னிகளாகவும், [56:37] (தம் துணைவர் மீது) பாசமுடையோராகவும், சம வயதினராகவும், [56:38] வலப்புறத்தோருக்காக (ஆக்கி வைத்துள்ளோம்). [56:39] முன்னுள்ளோரில் ஒரு கூட்டமும், [56:40] பின்னுள்ளோரில் ஒரு கூட்டமும் (வலப்புறத்தோராக இருப்பார்கள்). [56:41] இடது பாரிசத்திலுள்ளவர்களோ இடது பாரிசத்திலுள்ளவர்கள் யார்? (என்று அறிவீர்களா?) [56:42] (அவர்கள்) கொடிய அனல் காற்றிலும், கொதிக்கும் நீரிலும் - [56:43] அடர்ந்து இருண்ட புகையின் நிழலிலும் இருப்பார்கள். [56:44] (அங்கு) குளிர்ச்சியுமில்லை, நலமுமில்லை. [56:45] நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் (உலகத்தில்) சுகபோகிகளாக இருந்தனர். [56:46] ஆனால், அவர்கள் பெரும் பாவத்தின் மீது நிலைத்தும் இருந்தனர். [56:47] மேலும், அவர்கள், "நாம் மரித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகி விட்டாலும், நாம் மீண்டும் நிச்சயமாக எழுப்பப்படுவோமா?" என்று கேட்டுக் கொண்டு இருந்தனர். [56:48] அல்லது, முன்னோர்களான நம் தந்தையருமா? (எழுப்பப்படுவர்? என்றும் கூறினர்.) [56:49] (நபியே!) நீர் கூறும்: "(நிச்சயமாக உங்களில்) முன்னோர்களும், பின்னோர்களும். [56:50] குறிப்பிட்ட நாளின் ஒரு நேரத்தில் (நீங்கள் யாவரும்) ஒன்று கூட்டப்படுவீர்கள். |
| | | أحمد محمد لبن Ahmad.M.Lbn مؤسس ومدير المنتدى
عدد المساهمات : 49023 العمر : 72
| موضوع: رد: Al-Wâqi‘ah السبت 01 يوليو 2017, 6:42 pm | |
| [56:51] அதற்குப் பின்னர்: பொய்யர்களாகிய வழி கேடர்களே! நிச்சயமாக நீங்கள், [56:52] ஜக்கூம் (என்னும் கள்ளி) மரத்திலிருந்தே நீங்கள் புசிப்பவர்கள். [56:53] ஆகவே, "அதைக் கொண்டே வயிறுகளை நிரப்புவீர்கள். [56:54] அப்புறம் அதன்மேல் கொதிக்கும் நீரையே குடிப்பீர்கள். [56:55] பின்னும் ஹீம் - தாகமுள்ள ஒட்டகை குடிப்பதைப் போல் குடிப்பீர்கள். [56:56] இதுதான் நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்கு விருந்தாகும். [56:57] நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா? [56:58] (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா? [56:59] அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா? [56:60] உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம், எனவே நம்மை எவரும் மிகைக்க முடியாது. [56:61] (அன்றியும் உங்களைப் போக்கி விட்டு) உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில் உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல). [56:62] முதல் முறையாக (நாம் உங்களைப்) படைத்தது பற்றி நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள் - எனவே (அதிலிருந்து நினைவு கூர்ந்து) நீங்கள் உணர்வு பெற வேண்டாமா? [56:63] (இப்பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா? [56:64] அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா? [56:65] நாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாய் ஆக்கிவிடுவோம் - அப்பால் நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள். [56:66] நிச்சயமாக நாம் கடன் பட்டவர்களாகி விட்டோம். [56:67] மேலும், (பயிர்களிலிருந்து எதுவும் பெற முடியாதவர்களாகத்) தடுக்கப்பட்டு விட்டோம்" (என்றும் கூறிக் கொண்டிருப்பீர்கள்). [56:68] அன்றியும், நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா? [56:69] மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா? [56:70] நாம் நாடினால், அதைக் கைப்புள்ள தாக்கியிருப்போம்; (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா? [56:71] நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா? [56:72] அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா? [56:73] நாம் அதனை நினைவூட்டுவதாகவும், பயணிகளுக்கு பயனளிக்கப்பதற்காகவும் உண்டாக்கினோம். [56:74] ஆகவே, மகத்தான உம்முடைய ரப்பின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக. [56:75] நட்சத்திர மண்டலங்களின் மீது நான் சத்தியம் செய்கிறேன். [56:76] நீங்கள் அறீவீர்களாயின் நிச்சயமாக இது மகத்தான் பிரமாணமாகும். [56:77] நீச்சயமாக, இது மிகவும் கண்ணியமும் சங்கையும் மிக்க குர்ஆன் ஆகும். [56:78] பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கிறது. [56:79] தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள். [56:80] அகிலத்தாரின் இறைவனால் இது இறக்கியருளப்பட்டது. [56:81] அவ்வாறிருந்தும், (குர்ஆனின் மகத்தான) இச்செய்தி பற்றி நீங்கள் அலட்சியமாக இருக்கிறீர்களா? [56:82] நீங்கள் பொய்ப்பிப்பதை (இறைவன் தந்த) உங்கள் பாக்கியங்களுக்கு (நன்றியாக) ஆக்குகின்றீர்களா? [56:83] மரணத் தறுவாயில் ஒருவனின் (உயிர்) தொண்டைக் குழியை அடையும் போது- [56:84] அந்நேரம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். [56:85] ஆயினும், நாமோ அவனுக்கு உங்களை விட சமீபமாக இருக்கிறோம். எனினும் நீங்கள் பார்க்கிறீர்களில்லை. [56:86] எனவே, (மறுமையில் உங்கள் செயல்களுக்கு) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள் என்று இருந்தால் - [56:87] நீங்கள் உண்மையாளராக இருப்பின், (அவ்வுயிரை) மீளவைத்திருக்கலாமே! [56:88] (இறந்தவர் இறைவனுக்கு) நெருக்கமானவர்களில் நின்றும் இருப்பாராயின். [56:89] அவருக்குச் சுகமும், நல்லுணவும் இன்னும் பாக்கியமுள்ள சுவர்க்கமும் உண்டு. [56:90] அன்றியும், அவர் வலப்புறத்துத் தோழராக இருந்தால், [56:91] வலப்புறத்தோரே! உங்களுக்கு ஸலாம்" உண்டாவதாக" (என்று கூறப்படும்). [56:92] ஆனால் அவன் வழிகெட்டுப் பொய்யாக்குவோரில் (ஒருவனாக) இருந்தால் [56:93] கொதிக்கும் நீரே, அவனுக்கு விருந்தாகும். [56:94] நரக நெருப்பில் தள்ளப்படுவது (விருந்தாகும்). [56:95] நிச்சயமாக இதுதான் உறுதியான உண்மையாகும். [56:96] எனவே (நபியே!) மகத்தான உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக. |
| | | | Al-Wâqi‘ah | |
|
| صلاحيات هذا المنتدى: | لاتستطيع الرد على المواضيع في هذا المنتدى
| |
| |
| |